×

சிறுமி பலாத்காரம் போக்சோவில் விவசாயி கைது

மதுராந்தகம்: உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (49). இவர் விவசாயி. இவருடைய மகள் புனிதா (14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் விவசாயி குணசேகரன் வயது (50). இந்த சிறுமியிடம் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் அத்துமீறலில் குணசேகரன் ஈடுபட்டு வந்துள்ளார். இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால், அந்த சிறுமி இது குறித்து யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தெரிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு குணசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Tags : Girl raped, pokcho, farmer, arrested
× RELATED ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால்...