×

கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வருஷநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், செங்குளம்கண்மாய், கோவில்பாறை கண்மாய், புதுக்குளம் கண்மாய், இலந்தைக்குளம் கண்மாய், கோவிலாங்குளம் கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளால் போதிய அளவில் தண்ணீரை தேக்க முடியவில்லை.

இதனால் அப்பகுதியில் விவசாயத்துக்கு தேவையான பாசன நீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : removal , Kadamalai Mayilai Union, Kanmai, Aggression
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...