×

பொன்னேரி கிளைசிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்!!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைசிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணைக்கைதி சிறையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.  இந்நிலையில், டில்லிபாபு என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லிபாபு, கடந்த 7ம் தேதி பொன்னேரி கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் இன்று பொன்னேரி கிளைசிறையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது டில்லிபாபு திடீரென தப்பி ஓடியுள்ளார். தூய்மை பணி முடிந்து அனைத்து கைதிகளும் திரும்பிவிட்ட நிலையில், டில்லிபாபுவை மட்டும் வெகு நேரமாகியும் காணவில்லை. இதனைத்தொடர்ந்து, சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கைதி தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த காவலர்கள், சக கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தப்பி சென்ற டில்லிபாபுவை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சிறையில் உள்ள மற்ற கைதிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Prisoner ,jail ,Ponneri , Ponneri, Branch Jail, trial prisoner
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...