×

பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்து பெண் பலி விவசாயி கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே மேலமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44) விவசாயி. இவரது தந்தை முத்துவீரப்பன் சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து தனது தந்தையின் படத்திறப்பிற்கு பிரமாண்டமான பிளக்ஸ் பேனர் ஒன்று மேலமேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் வைத்து இருந்தார். நேற்றுமுன்தினம் அவ்வழியாக புதுக்கோட்டையை கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி (48) என்பவர் தனது சகோதரர் வீட்டிற்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் பைக்கில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளார். மேலமேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் பேனர் சரிந்து விஜயராணி மீது விழுந்தது. இதில் விஜயராணி உயிரிழந்தார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்….

The post பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்து பெண் பலி விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Ravichandran ,Melamettupatti ,Thiruvonam, Thanjavur district ,Muthuveerappan Sila ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...