செங்குன்றம்: செங்குன்றம் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கூடுரைச் சேர்ந்த நகைவியாபாரி மகேஷ்பாபு, சென்னையில் நகை வாங்கச் செல்வதாக போலீசிடம் தகவல் தெரிவித்தார். உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.23 லட்சத்தை பறிமுதல் செய்து ஐ.டி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.