சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 4 கோட்ட பொறியாளர்களை திடீரென பணியிட மாற்றம் செய்து முதன்மை இயக்குனர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மதுரை நெடுஞ்சாலை (ஆய்வு) கோட்ட பொறியாளர் வடிவேல் திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, கோவை நெடுஞ்சாலை (ஆய்வு) கோட்ட பொறியாளர் தங்கராஜன் மதுரை நெடுஞ்சாலை கோட்டம் (ஆய்வு), சென்னை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 கோட்ட பொறியாளர் கந்தசாமி, கோவை நெடுஞ்சாலை (ஆய்வு) கோட்டம், இந்திய தேசதிய நெடுஞ்சாலை (அயல்பணி) கோட்ட பொறியாளர் சங்கர சுப்ரமணியன் திண்டுக்கல் தேசதிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பணியிட மாற்றம் செய்யப்பட்ட கோட்ட பொறியாளர்கள் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை