×

காதலிக்க மறுத்த மாணவி சரமாரி குத்திக்கொலை: கோவையில் வாலிபர் வெறிச்செயல்

கோவை: கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். ேகாவை பேரூர் அருகேயுள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (47). பால் வியாபாரி. இவர் மகள் ஐஸ்வர்யா (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படித்து வந்தார். ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்த மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளியான ரத்திஷ் (20) என்பவருடன் ஜஸ்வர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அவரது பெற்றோர் கண்டித்தனர். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா கடந்த 3 மாதமாக ரத்திஷ் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.  இதில் ரத்திஷ் கோபமடைந்தார்.

ஐஸ்வர்யாவை சந்திக்க பேச ஆர்வம் காட்டினார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஐஸ்வர்யா தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது ரத்திஷ் அங்கு வந்தார். ‘‘என்னிடம் ஏன் பேசுவதில்லை. என்னை விட்டுவிட்டு நீ வேறு யாரையும் கல்யாணம் செய்ய விடமாட்டேன்.  நீ என்னை விட்டு போக நினைத்தால் உயிருடன் இருக்க மாட்டாய்’’ என எச்சரித்தார். அதற்கு ஐஸ்வர்யா, ‘‘இனி உன்னுடன் பேச மாட்டேன். என்னை தேடி வரக்கூடாது’’ என கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரத்திஷ் கத்தியால் ஐஸ்வர்யாவை சரமாரியாக குத்தினார். ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து அவரது தந்தை சக்திவேல் வெளியே ஓடி வந்தார். மகளை கத்தியால் குத்திய ரத்தீசை தடுக்க முயன்றார். அப்போது அவரது கைகளிலும் ரத்திஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா இறந்தார். இதுதொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய ரத்தீசை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : student ,Volleyball stabbing ,volley student ,spree ,Coimbatore , Love, student, stabbing, cove, teenager
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...