×

பிரபல கணித மேதை சிஎஸ் சேஷாத்திரி மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்டரில் இரங்கல்

டெல்லி: பிரபல கணிதமேதை சிஎஸ் சேஷாத்திரி நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை கணிதவியல் நிறுவனத்தை உருவாக்கியவரான சி.எஸ் சேஷாத்தரி (88) வயது மூப்பு காரணமாக காலமானார். காஞ்சீவரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்திரி என பெயரை கொண்டசி. எஸ் சேஷாத்தரி இயற் கணிதவியலில் புலமை பெற்றிருந்தார். இப்பிரிவில் இவர் வகுத்த கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1932 ம் ஆண்டு பிப்.,29 ல் பிறந்த சேஷாத்திரி 1953 ம் ஆண்டுமெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கணிதவியலில் பி.ஏ.(ஹானர்ஸ்)பட்டம் பெற்றார். தொடர்ந்து 1958 ம் ஆண்டு பாம்பே யுனிவர்சிட்டியில் பி.எச்.டி., முடித்தார். 1971 ம் ஆண்டு இந்திய அறிவியல் அகாடமியின் பெல்லோவாக தேர்வு செய்யப்பட்டார். 1953 முதல் 1984 வரையில் மும்பையில் உ்ளள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சில் கணித பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து சென்னை ஐஎம்எஸ்சியிலும் பணியாற்றி உள்ளார். பாரீஸ், கேம்பிரிட்ஜ், கொயோட்டோ உள்ளிட்ட பல்வேறு பல்கலை.,யில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார்.

இவரின் கணித திறைமையை பாராட்டி அமெரிக்கா மேதமெடிக்கல் சொசைட்டி பாரீசின் யுனிவர்சிட்டி ஆப் பியரி மற்றும் பத்மபூஷன், ஷாந்தி ஸ்வரூப் பத்நாகர் விருது. இந்திய அறிவியல் அகாடமி சார்பில் ஸ்ரீனிவாசா ராமானுஜம் விருது, பனாரஸ் இந்து பல்கலை சார்பில் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சேஷாத்திரியின் மறைவு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பேராசிரியர் சி.எஸ். சேஷாத்ரி காலமானதில், கணிதத்தில் சிறப்பான பணிகளைச் செய்த ஒரு அறிவார்ந்த தலைவரை இழந்துவிட்டோம் என பதிவிட்டுள்ளார். அவரது முயற்சிகள், குறிப்பாக இயற்கணித வடிவவியலில், தலைமுறைகளாக நினைவில் வைக்கப்படும் என தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் எனவும். ஓம் சாந்தி எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags : Modi ,Amit Shah ,death ,CS Seshadri , Prime Minister Modi ,Home Minister ,Amit Shah,Twitter,death
× RELATED மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும்...