×

பர்கூர் மலைப்பகுதி தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் தனியார் தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊசி மலையில் மாதேஷ் என்பவர்  வனப்பகுதியோரம் உள்ள தனது தோட்டத்துக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். நேற்று உணவு தேடி வந்த ஆண் யானை, மாதேஷ் தோட்டத்துக்கு வந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் வனத்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இதில், இறந்த யானைக்கு 35 வயது என தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர் அசோகன், யானையை உடற்கூராய்வு செய்தார். பின்னர், யானையின் இரண்டரை அடி நீளமுள்ள 2 தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்குப் பின் யானை, மற்ற விலங்குகளுக்கு உணவாக  அதே இடத்தில் விடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளர் மாதேஷை போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : hills ,Bargur ,garden , Bargur, hill station, electricity, male elephant
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...