டெல்லி: குடியிருப்பு வளாகத்துக்குள் கொரோனா பற்றிய எச்சரிக்கை வாசகங்கள், விளம்பரங்களை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், கார் துடிப்பவர்கள் வெப்பமானி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் பூங்கா, மொட்டை மாடி, லிப்ட் ஆகியவற்றில் 6 அடி இடைவெளி கடைப்பிடிக்கவேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.