டெல்லி: எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி தமிழில் ட்விட் செய்துள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது.