சென்னை: தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் பரிந்துரைகள் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புள்ள சூழலில் தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு நடத்தபட உள்ளது. தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.