சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூ-ட்யூப் இணையத் தொலைக்காட்சியில் தமிழ்க் கடவுள் முருகனை புகழ்ந்து பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் பாடலின் பொருளையும், நோக்கத்தையும் திரித்து, முருகக் கடவுளையும், அவரது பக்தர்களையும் இழிவு படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், இணையத் தொலைக் காட்சியின் பின்னணியில் உள்ள மேலும் பலரை இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். யூ-ட்யூப் நிறுவனத்திடம் புகார் செய்து இனையத் தொலைக்காட்சி ஒலிபரப்பை தடை செய்யவும் சைபர் கிரைம் காவல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.