×

உணவுக்கழக பெண் ஊழியர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

ஆவடி: இந்திய உணவு கழகத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவர், கடந்த  5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பார்வதி (40). இந்திய உணவு கழகத்தில் தூய்மைப்பணி ஊழியர்.இந்நிலையில், பார்வதி, நேற்று முன்தினம் அலுவலகத்தில் தூய்மைப்பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிக்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பட்டாபிராம் போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Restaurant ,suffocation , Restaurant female employee, suffocation, fatality
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...