×

பொள்ளாச்சியில் விதிமுறை மீறிய கல்லூரிக்கு அதிகாரிகள் சீல்: ரூ.1 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில்  நேற்று விதிமுறைகளை மீறிய தனியார் கல்லூரியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் பிளஸ்2  தேர்வு முடிவு நேற்று வெளியானதையடுத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி  பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பல்வேறு பாட பிரிவுகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பம் வாங்க வந்தனர். அந்த  கல்லூரி முன்பு காலை  முதலே கூட்டம் அதிகமானது. இதனை தொடர்ந்து கொேரானா ஊரடங்கை மீறி சமூக இடைவெளியின்றியும், விதிமீறல் இருப்பதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் வருவாய்துறையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து அந்த தனியர் கல்லூரிக்கு சென்ற, பறக்கும் படை தனிக்குழுவினர் கண்காணிப்பில்  ஈடுபட்டனர். பின்னர் கல்லூரியில் ஆங்காங்கே கூட்டமாக நின்ற மாணவர்களை வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, விதிமுறைகளை மீறியதாக  அந்த தனியார் கல்லூரிக்கு சீல் வைத்து  மூடப்பட்டது. மேலும், ரூ.1லட்சம் அபராதம்  விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : College ,Pollachi , Pollachi, regulation, college, seal, fine
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...