×

திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயன்றதாள் பரபரப்பு!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பார்சல் என்ற பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் தங்கம் கடத்த முயன்ற வழக்கில் தினமும் புதுப்புது திருப்பங்கள் நிகழ்கின்றன.  இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமீரக துணைத் தூதருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜெயகோஷ் என்ற போலீஸ்காரருக்கும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வீட்டை விட்டு ஜெயகோஷ் மாயமாகியுள்ளார்.

அவரின் மனைவி போனில் தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தும்பா போலீஸ் நிலையத்தில் ஜேயகோஷ் மனைவி புகாரளித்ததை அடுத்து, போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தன் வீட்டருகேயுள்ள குளத்து கரையில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு போலீஸ்காரர் ஜெயகோஷ் மயங்கிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வருவார்கள் என்ற அச்சத்தில் இருந்த ஜெயகோஷ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Tags : suicide ,United Arab Emirates ,security guard ,Trivandrum , Trivandrum, United Arab Emirates Embassy, bodyguard, suicide attempt
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!