கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பதை அறிந்து திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் குவிந்துள்ளனர். அங்கு கட்சித் தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.