×

ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் 50 அதிமுகவினர் மீது வழக்கு

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அருகே பொது இடத்தை ஆக்கிரமித்தை கண்டித்து, திருக்கழுக்குன்றத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊரடங்கு உத்தரவை மீறியதாக அதிமுகவினர் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ஊருக்கு பொதுவான இடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் பாதை அமைத்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனை, கண்டித்து நேற்று அதிமுக சார்பில், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் உட்பட அதிமுகவினர் 50 பேர் மீது திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Demonstration ,superintendents , Condemnation of occupation, demonstration, 50 supremacists, case
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்