காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தங்கியுள்ள முகாம் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அறை, சுற்றியுள்ள பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.