×

கஞ்சா வியாபாரி என அவதூறு நடிகை வனிதா மீது இளம்பெண் புகார்

சென்னை: நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பால் என்பரை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியை யூ-டியூபில் பதிவு செய்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை வனிதாவின் 3வது திருமணம் குறித்து சென்னை சாலிகிராமம் தசரதபுரம் சண்முக சுந்தரம் தெருவை சேர்ந்த சூர்யா தேவி (27) என்பவர் கடுமையாக எதிர்த்து யூ-டியூபில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், மனமுடைந்த நடிகை வனிதா, அந்த வீடியோவை பதிவு செய்த சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், நிருபர்களிடம் பேசும்போது, சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா தேவி நேற்று வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் வாடகை வீட்டில் கணவர், மகன், மகளுடன் வசித்து வருகிறேன். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பற்றி யூ-டியூபில் வீடியோ வெளியிட்டதால் என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், நான் ஒரு கஞ்சா வியாபாரி என்று கூறி என் மீது அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார். இது எனது மனம் புண்படும்படியாக உள்ளது. எனவே நடிகை வனிதா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vanitha ,Teen ,cannabis dealer , Cannabis dealer, libel, actress Vanitha, teenager, complaint
× RELATED தாதா கேரக்டரில் சோனியா அகர்வால்