×

நோயாளியின் 10 சவரன் தாலி செயின் திருட்டு

சென்னை: திருவான்மியூரை சேர்ந்த தேவிபிரசாத் என்பவர், தனது தாய் சந்திரா (60) என்பவரை அறுவை சிகிச்சைக்காக வடபழனியில் நூறடி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 24ம் தேதி சேர்த்தார். அப்போது, சந்திரா அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை கழற்றி அறையில், அவரது பையில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி, அந்த பையிலிருந்த 10 சவரன் தாலி மாயமானதை கண்டு தேவிபிரசாத் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேவிபிரசாத் வடபழனி காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Patient , Patient, 10 Shaving Tali, Chain, Theft
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...