×

ஈரானில் சிக்கிய 40 மீனவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்றிருந்தனர். கொரோனா வைரசால், அவர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி 687 மீனவர்கள், கப்பலில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். கப்பலில் இடம் இல்லாததால் 40 பேர் ஈரானில் தவித்தனர். அவர்கள் சிறப்பு மீட்பு விமானம் மூலம் டெல்லி வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றதும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : fishermen ,Chennai ,Iran ,return , Trapped in Iran, 40 fishermen returned to Chennai
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...