×

கணவன் என்று பொய் சொல்லி் கள்ளக்காதலனுடன் குவாரன்டைனில் கும்மாளம்: தில்லாலங்கடி பெண் ஏட்டு சிக்கினார்

நாக்பூர்: கள்ளக்காதலனை புருஷனாக காட்டி, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் கும்மாளம் போட்ட தில்லாலங்கடி பெண் போலீஸ் ஏட்டு சிக்கினார். இந்த கூத்தை கேள்விப்பட்ட கள்ளக்காதலனின் நிஜ பெண்டாட்டி பதறியடித்து வந்து, புருஷனை மீட்டுச் சென்றார். கொலைகார கொரோனா, குசும்பு பிடித்த சிலருக்கு கொண்டாட்டமாகிப் போகிறது. அப்படிப்பட்ட சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்துள்ளது. நாக்பூரில் போலீசில் ஏட்டாக பணிபுரிகிறார் அந்த இளம்பெண். திருமணம் ஆகாதவர். சமீபத்தில் உடன் பணியாற்றும் ஒரு போலீசுக்கு கொரோனா உறுதியாக, இளம்பெண் ஏட்டுவை போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அப்போது, தனக்கு திருமணமாகி விட்டதாகவும் தனது கணவரையும் தன்னுடன் சேர்த்து தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அந்த பெண் ஏட்டு கூறி உள்ளார். அதை நம்பி அவர் கூறிய நபரையும் சேர்த்து தனிமைப்படுத்தும் மையத்திற்கு ஜோடியாக அனுப்பி வைத்தனர். இந்த ஜோடி 3, 4 நாட்கள் குவாரன்டைனில் செம கும்மாளம் அடித்துள்ளனர். ஏதோ, ஹனிமூன் வந்ததுபோல் நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் பிறகுதான், வந்திருப்பது கணவன் அல்ல, கள்ளக்காதலன் என்ற அதிர்ச்சிகர தகவல் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஒரு அரசு விழாவின் போது, பெண் ஏட்டுவுக்கும், தபால் துறையில் பணியாற்றும் அவருடைய  கள்ளக்காதலனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலன் ஏற்கனவே திருமணமானவர். அது தெரிந்தும் அந்த பெண் ஏட்டு நெருங்கிப் பழகி உள்ளார். தனிமையில் இருக்க ஒருவாய்ப்பாக குவாரன்டைன் வாய்ப்பு கிடைத்ததும் அதை கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார். மூன்று நாட்களாக புருஷன் வீட்டுக்கு வராமல் தவித்துப் போன கள்ளக்காதலனின் மனைவி, அலுவலக நண்பர்களிடம் விசாரித்த போதுதான் கள்ளக்காதல் மேட்டரே தெரிந்துள்ளது.

அவர் பதறியடித்து முகாமுக்கு ஓடி வர, கொரோனா பீதியால் அவரை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். விஷயம் விவகாரமாகி விடாமல் இருக்க, உடனே அவர் பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கமிஷனரையும் சந்தித்து மனு கொடுத்தார். அதன்பிறகுதான் கள்ளக்காதல் ஜோடியை பிரித்து, கள்ளக் காதலனை அவருடைய மனைவியுடன் அனுப்பி வைத்தனர். ‘கொரோனாவை ஆபத்தாக பார்க்காமல், ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி கூறியதை தப்பாக புரிந்து கொண்ட ஜென்மங்க இவங்க’ என புலம்புகின்றனர் நாக்பூர் போலீஸ் அதிகாரிகள்.

Tags : Dillalangadi , Husband, False Love, Quarantine, Kummalam, Dillalangadi Female Record
× RELATED அண்ணாமலையின் தில்லாலங்கடி வேட்புமனு:...