சென்னை: உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடிக்கு உலகத் தமிழர்கள் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பாரதப் பிரதமர் அவர்களின் வாய்மொழியாக கேட்கும் போது தமிழ்மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கி வழிகின்றன. இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் வகையில் மானிட வாழ்விற்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கி கூறும் திருவள்ளுவப் பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவ நெறியில் இந்த வையகம் வாழ்வு பெற வேண்டும் என்றும் பிரதமர் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருப்பதைக் கண்டு சொல்லொணா பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன் என கூறினார்.