×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சி!!!

நாகை:  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன் குளத்தில் சுரேஷ்-யோகம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், யோகம்மாள் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, யோகம்மாள் அருகிலிருந்த கிணற்றில் 2 ஆண் குழந்தைகளையும் தூக்கி போட்டுள்ளார்.

பின்னர், தானும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் அவரது 3 வயது மற்றும் ஒன்றரை வயது ஆண்குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், யோகம்மாளை அருகில் வசிப்பவர்கள் காப்பாற்றி கருப்பங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, யோகம்மாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டதாரியான யோகாம்மாள் ஊரடங்கால் வேலை இன்றி தவித்து வந்துள்ளார்.

இதனால் தினந்தோறும் உணவிற்குக்கூட வழியில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த யோகாம்மாள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,children ,Vedaranyam ,Naga District , Mother attempts suicide with 2 children near Vedaranyam in Naga District !!!
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்