×

நேதாஜியின் ஐஎன்ஏ படையில்பணியாற்றிய பெண் மரணம்

சாயல்குடி: நேதாஜி சுபாஸ்சந்திர போஸின் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய காந்திமதி பாய் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே மேலபண்ணைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் காந்திமதிபாய்(85). இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ஐஎன்ஏ படையின் ஒரு பிரிவான பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடினார். பின்னர் சொந்த ஊரான மேலபண்ணைகுளத்தில் கணவர் ராமசாமியுடன் வசித்து வந்தார். கணவர் இறந்துவிட்டார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றிய காந்திமதி பாய் நேற்று காலமானார். இவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை சொந்த ஊரில் நடந்தது.

Tags : army ,Death ,INA ,Netaji , Netaji, INA force, female death
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...