×

குடியாத்தம் அருகே அகரம் சேரியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்: கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் மனு

குடியாத்தம்:  குடியாத்தத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள், கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். குடியாத்தம் அடுத்த அகரம்சேரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பஸ் நிலையம், தெரு மற்றும் கோயில் திருவிழாக்களில் பலூன், பொம்மை, ஊசி, மணி  போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்று குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுடன் ஊசி, பாசி மணி விற்பனை செய்து கொண்டு நூதன முறையில் மனு அளிக்க வந்தனர். பின்னர், ஆர்டிஓ ஷேக்மன்சூரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்டிஓ உறுதி அளித்தார். அப்போது தாசில்தார் வத்சலா, துணை தாசில்தார் பலராமன் உடனிருந்தனர்.

Tags : slum ,Agaram ,Gudiyatham ,Kottatsiyar , Gudiyatham, Agaram Slum, Free Housing Patta, Kottatsiyar, Narikkuvars
× RELATED தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட...