×

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

ஸ்ரீவைகுண்டம்:  ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் எனப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் இன்று  (16ம் தேதி) துவங்குகிறது. விழாவை முன்னிட்டு  இன்று (16ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வைகுண்டம் பங்குத்தந்தை கிஷோக் கொடியேற்றி  சிறப்பு ஆசீர்வாத நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடத்தி வைக்கிறார். இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பக்தர்களின் வசதிக்காக www.cruzkovil.in. என்ற வெப்சைட்டில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   கொடியேற்றத்தைதொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.  ஆலயத்தின் முக்கியத்திருவிழாவான 10ம் திருவிழா வரும் 25ம் தேதி ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 26ம்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை வைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை கிஷோக் செய்து வருகிறார்.

ஆன்லைனில் ஒளிபரப்பு
ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை கிஷோக்  கூறுகையில், ‘‘மக்கள் நலனுக்காக மக்கள் இல்லாமல் இவ்வாண்டு திருவிழா நடக்கிறது. இந்தாண்டு உலக நாட்டையே அச்சுறுத்தும் விதமாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்காக சிறப்பு திருப்பலியும். கடலோர மீனவ மக்களுக்காகவும் தொழில் இல்லாமல் வறுமையில் வாடிவரும் மக்களுக்காகவும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.  திருவிழா நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதால் வீட்டில் இருந்தபடியே பக்தியுடன் பார்த்து நமது வேண்டுதலை இறைவனிடம் எடுத்துரைத்து அவர் ஆசியை பெற்றுக்கொள்வோம்’’ என்றார் அவர்.


Tags : Srivaikuntam St. Chandiyakappar Temple Festival , Srivaikuntam, St. Chandiyakappar Temple Festival
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...