×

திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!: குழந்தை உள்பட 6 பேர் பரிதாப பலி!!!

நெல்லை: திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த சூடுவிளையத்தான் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர், சென்னையை நோக்கி கார் ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதிரி என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கார் விபத்துக்குள்ளானது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் தாறுமாறாக ஓடிய கார் மரத்தின் மீது மோதி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த குழந்தை உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி உள்ளிட்ட திண்டிவனம் காவல்துறையினர், கிரைன் மூலம் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த முருகன், முருகராஜ், சொரிமுத்து மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல்கள் உடல்கூறாய்விற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து பாதிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tindivanam ,ditch , Car loses control near Tindivanam, crashes into abyss, kills 6, including child
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது