×

புதுக்கோட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான கைதி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும் வழியில் தப்பி ஓடியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே ஏம்பல் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியவை கடந்த 30ம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டதன்பேரில் ஏம்பல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், விசாரணையின்போது, அதே கிராமத்தை சேர்ந்த, பூக்கடை வைத்திருந்த ராஜா என்பவர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

அப்போது செல்லும் வழியில் 2 காவலர்கள் இருந்த நிலையில், திடீரென கைதி கைவிலங்கை அவிழ்த்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், மருத்துவமனை வளாகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கைதி தப்பி ஓடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Pudukottai , Pudukottai girl sex murder case arrestee escapes !!!
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...