சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம் 3 வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லி மென்பொருள் வல்லுநர்களுடன் தொழில்நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.