×

எண்ணூரில் குடிபோதை தகராறு வாலிபர் வெட்டிக்கொலை: தந்தை, 5 மகன்கள் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் காசி விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(26). அதே பகுதியை சேர்ந்தவர் அமுதன் நிரஞ்சன்(29). இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் அதே பகுதியில் மது அருந்தினர். அப்போது, போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தமிழரசன் தன் வீட்டிலிருந்து கத்தி எடுத்து வந்து அமுதன்நிரஞ்சனை வெட்டியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமுதன்நிரஞ்சன் அங்கிருந்து ஓடி வீட்டுக்குச் சென்று தன் தந்தை சிங்காரவேலன் என்பவரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிங்காரவேலன், அமுதன்நிரஞ்சன் மற்றும் இவரது மூன்று சகோதரர்கள் கத்தியுடன் ஓடிவந்து தமிழரசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை, கழுத்து போன்ற இடங்களில் பலமான வெட்டுக்காயம் அடைந்த தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார். எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலன் அவரது மகன்கள் அமுதன்நிரஞ்சன்(29), அலெக்ஸ் ராஜேஷ்(33), மைக் டைசன்(24) நெல்சன் மண்டேலா(23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.


Tags : sons ,murder ,Ennore , In Ennore, drunken brawl, juvenile murder, father, 5 sons, arrested
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி