×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாடப்புத்தகங்கள் விநியோகம்

காஞ்சிபுரம்:தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கங்ள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 20 ஆயிரத்து 800 மாணவர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவர்கள் 8 ஆயிரத்து 400 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 31 ஆயிரத்து 072 மாணவர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவர்கள் 25 ஆயிரத்து 888 மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மூலம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Tags : Kanchipuram ,districts ,Chengalpattu , Kanchipuram, Chengalpattu District, Textbooks, Distribution
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...