×

பாதை அமைத்த விவகாரம் இமயம் ஆதரவாளர்கள் மேலும் 5 பேர் கைது

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அருகே பொது இடத்தில் பாதை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இமயம் ரியல் எஸ்டேட் குமார் தரப்பில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ஊருக்கு சொந்தமான பொது இடத்தில் பாதை அமைப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே, இமயம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் குமார் தரப்பை சேர்ந்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஆறுமுகம் (42), தேவராஜ் (24), மோகன் (24), பிரேம்குமார் (31) மற்றும் பெருங்குடியை சேர்ந்த சிவக்குமார் (39) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று  கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், இந்த மோதலில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : supporters ,Himayam , Path-setting affair, Himalayas, supporters, 5, arrested
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...