×

காமராஜர் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் ஜி.வி. மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன் உள்ள காமராஜர் சிலை மற்றும் மகாத்மா காந்தி சிலைக்கும், காந்தி ரோடு காமராஜர் சிலைக்கும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஜி.வி.மதியழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழச்சியில் தமிழகம் மீட்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்க்கபட்டது. உடன் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன்,  வீரபத்திரன், சடையாண்டி, லோகநாதன், சாம்பசிவம், குமார் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் வட்டார வர்த்தக கமிட்டி சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வட்டாரத் தலைவர் பூபதி தலைமையிலும் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம், :திருப்போரூர் பகுதிகளில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடந்தது. விழாவிற்கு, திருப்போரூர் நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் என்.தியாகு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சுந்தரமூர்த்தி காமராஜரின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாமல்லபுரம் நகர தலைவர் புனிதவேல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திருப்போரூர் அடுத்த மானாமதி மற்றும் அருங்குன்றம் ஆகிய பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், திருப்போரூர் தெற்கு வட்டார தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியேற்றி வைத்து, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகர காஙரஸ் கட்சி சார்பில் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள்விழா செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சிக்கு காங்கிரஸ் நகர தலைவர் ஜெ.பாஸ்கர் தலைமைவகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜிசீனு கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன் முருகன் குமரவேல் ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று செங்கல்பட்டு நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெயசீலன்,  ஜெகநாதன்,  துனைத்தலைவர் உத்திரகுமார் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags : birthday party ,Kamaraj , Kamaraj, birthday, ceremony
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...