×

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் போது நாகராஜ், பாஷா ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டிங் டேங்கை சுத்தம் செய்வதால், ஏராளமான பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் செப்டிங் டேங்க் கிளின் செய்யும் போது உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

இதற்கு முன்னர் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். சோமசுந்தரம் என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகை சம்பவங்களுக்கு தீர்வு காணாத வகையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அப்பாவி மக்கள், நிலையை கண்டு அதிர்ச்சியளிக்கிறது.

Tags : Chennai ,Pattinapakkam Sinivasapuram ,poison gas attack ,Sinivasapuram ,Pattinapakkam , Chennai, Pattinapakkam, sewage, poison gas
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...