×

தமிழ்நாடு காதித ஆலையில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு.: உறவினர்கள், சக தொழிலார்களால் ஆலை முற்றுகை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு காதித ஆலையில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் சக தொழிலார்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காதித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்த கலைச்செல்வன் நேற்று பணி முடிந்த பிறகு காணவில்லை. ஆலைக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க அமைக்கப்பட்ட குளத்தில் கலைச்செல்வனின் உடல் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது உறவினர்களும் சக தொழிலாளர்களும் ஆலை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் இளைஞர் கலைச்செல்வன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாகவும் ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் 3 மணி நேரம் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு  வந்தது. மேலும் இறந்து போன கலைச்செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Tags : Contract worker ,Tamil Nadu ,relatives ,co-workers ,siege , Contract, worker,Tamil Nadu, paper, mill,co-workers
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...