×

சென்னையில் 2 பேருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: 2 நாளில் மார்க்கெட் பகுதியில் சிசிடிவி கேமரா; ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள சந்தைகளில் இரண்டு நாட்களில் சிசிடிவி கேமிரா பொறுத்தப்படும். தற்போது 2 பேருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் உள்ள சந்தைகளில் தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவது தொடர்பாக வணிகர் சங்கங்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் உள்ள 81 மார்க்கெட் பகுதிகளை தனிதனியாக கண்காணிக்க நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் சீல் வைக்கப்படும். இரண்டு நாட்களுக்குள் அனைத்து சந்தைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும். கோயம்பேடு சந்தையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. தற்போது இரண்டு பேருக்கு தான் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Commissioner ,market area , Chennai, 2 people, 2nd time, Corona, in 2 days, Market area, CCTV camera; Commissioner Prakash, Information
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...