×

தொண்டு நிறுவனத்தில் சிறுவர்கள் தப்பி ஓட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து இரண்டு சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் எம்டிஎம் நகரில் ஐஆர்சிடிஎஸ் என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, ஆதரவற்ற சிறுவர்கள், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் என ஏராளமானோர் தங்கி உள்ளனர்.இதன் ஒருங்கிணைப்பாளராக பழனி (40) என்பவர் உள்ளார். இந்நிலையில், இங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த, சோழவரம் காவல் நிலைய வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவன் மற்றும் 10 வயது கொண்ட ஆதரவற்ற சிறுவன் ஆகிய இருவர், கடந்த 11ம் தேதி இரவு, தாழ்ப்பாளில் இருந்த ஸ்குருவை கழற்றி, கதவை திறந்துகொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இரு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.


Tags : Boys ,charity , Charity, boys, escape
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு