×

காவல் துறையில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு கொரோனா தொற்றால் மீனம்பாக்கம் எஸ்.ஐ உயிரிழந்தார்: உருவ படத்திற்கு டிஜிபி, போலீஸ் கமிஷனர் மலரஞ்சலி

சென்னை: கொரோனா தொற்றால் மீனம்பாக்கம்  காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த  எஸ்ஐ குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உருவ படத்திற்கு டிஜிபி திரிபாதி மற்றும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செலுத்தனர். சென்னை தாம்பரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் குருமூர்த்தி(54). இவர் தமிழக காவல் துறையில் 1984ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த குருமூர்த்தி உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அயல் பணியாக மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ரோந்து வாகன பொருப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 26.6.2020ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் உதவி ஆய்வாளர் குருமூர்த்தி உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. அதைதொடர்ந்து நேற்று மதியம் தாம்பரத்தில் உள்ள சுடுகாட்டில் அரசு முழு மரியாதையும் நல்அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட குரூமூர்த்தி திருவுருவ படத்திற்கு நேற்று மாலை டிஜிபி திரிபாதி மற்றும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், அவருடன் பணியாற்றிய சக காவலர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Malaranjali ,Meenambakkam SI , Police, death toll rises to 4, Corona, Meenambakkam SI killed, DGP, Commissioner of Police, Malaranjali
× RELATED ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு...