×

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு காயங்கள் இருந்ததாக கைதி வாக்குமூலம்

தூத்துக்குடி: கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்கள் குறித்து கோவில்பட்டி கிளை சிறை கைதி ராஜா சிங் என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்களுக்கு மருந்திடப்பட்டது என்று கைதி ராஜா சிங் கூறியுள்ளார். காவல்துறை நண்பர்களும் தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறியதாக ராஜா சிங் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தன்னையும் தாக்கியதாக ராஜா சிங் குற்றம்சாட்டியுள்ளார். ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் எஸ்.ஐ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையற்ற கைது, ஆயுதங்களை பயன்படுத்தி காயம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 2 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



Tags : Jayaraj ,jail ,prisoner ,Kovilpatti ,Pennix , Jayaraj, fennix, prisoner, confession
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...