லண்டன்: இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருதி மொபைல் ஆப்பரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் Huawei நிறுவன 5ஜி சாதனங்கள் அனைத்தையும் 2027ம் ஆண்டுக்குள் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.