திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி மற்றும் முட்டை வழங்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கள் கிழமையில் பிரியாணி, சிக்கன் ஃபிரை மற்றும் முட்டை வழங்கப்படுவதாக மருத்துவ அதிகாரி திலீபன் கூரியுள்ளார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது 84 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.