×

மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில் சுழட்டி அடிக்க போகும் சூறாவளி... திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தருமபுரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பந்தலூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கும். சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் கர்நாடகா முதல் தெற்கு குஜராத் கடற்பகுதி வரையிலும், தென்மேற்கு மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபு கடல் பகுதிகளுக்கு வரும் 18ம் தேதி வரையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags : Tiruvarur ,thundershowers ,Tiruvallur ,Thanjavur ,Vellore , Wind, Direction, Speed Variation, Tiruvallur, Vellore, Thanjavur, Tiruvarur, Thunder, Heavy rain
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...