×

அரசு மருத்துவர் உட்பட 56 பேருக்கு கொரோனா

பெரம்பூர்: ஓட்டேரி யாகூப் கார்டன் தெருவில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் உள்பட திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்தில் நேற்று 119 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 93 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புழல்: புழல் சிறை விசாரணை பிரிவில்  பணியாற்றும் 35 வயது காவலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல், சோழவரம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிவரும் 31 வயது எஸ்ஐக்கு கொரோனா தொற்று உறுதியானது.


Tags : Corona ,government doctor , Government Physician, 56, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...