சென்னை: கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார். வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு திட்ட பணிகளையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.