×

திண்டுக்கல்லில் உள்ள உணவகங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்க!: மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

திண்டுக்கல்: உணவகங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆவணங்களுடன் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதி அளித்து கடந்த மே 31ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும், சமூக இடைவெளியை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பெரும்பாலான உணவகங்கள் இவற்றை பின்பற்றுவதில்லை என்றும் இதனால் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரியும் திண்டுக்கல்லை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது உணவகங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அதிகாரிகள் தினமும் உணவகங்களில் ஆய்வு செய்வதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், திண்டுக்கல்லில் உள்ள உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுத்து குறித்து ஆவணங்களுடன் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அம்மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Tags : Dindigul ,restaurants ,District Collector , Restaurants in Dindigul file status report on following regulations!
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...