செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த தேவேந்திரன் சென்னை வியாசர்பாடியில் கைது செய்யப்பட்டார். செய்யூர் நாயனார் குப்பத்தில் சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை வழக்கில் ஏற்கனவே புருசோத்தமன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.