மதுரை: பழனி தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் ரூ.600 நிவாரணம் தேவை என மனுதாரர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.