×

பெரம்பலூர் அருகே கிணற்றில் இறங்கியவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் செல்லியம்பாளையத்தில் கிணற்றில் இறங்கியவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார். கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது உள்ளே இறங்கிய இருவர் உள்ளேயே  மயங்கினர். இருவரை மீட்க கிணற்றுக்குள் சென்ற 3 தீயணைப்பு வீரர்களும் உள்ளே மயங்கினர். தீயணைப்பு வீரர்கள் இருவர், கிணற்றுக்குள் இறங்கிய இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கிணற்றின் உள்ளே மயங்கிய ராதாகிருஷ்ணன், தீயணைப்பு வீரர் ராஜ்குமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். 


Tags : firefighter ,Perambalur ,fire , Perambalur, firefighter, dies
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்